Mr. Devendhira Poopathy

Mr. Devendhira Poopathy

He is a well established Tamil poet/writer who has reached this level pursuing his passion towards Tamil Literature and interest to explore new places. He is also the Joint Commissioner of Commercial Taxes, Tamil Nadu.

Follow Kadavu

பருவத்திலிருந்து விலகியது நதிக்கரைகள் கடலைப் பார்வையிடுவது கர்ப்பத்திலிருக்கும் கண்கள்...

— நரைத்த நினைவுகள் | முடிவற்ற நண்பகல்

நரைத்த நினைவுகள்

பருவத்திலிருந்து விலகியது நதிக்கரைகள்
கடலைப் பார்வையிடுவது
கர்ப்பத்திலிருக்கும் கண்கள்
எல்லாப் புகைப்படங்களும்
மனித உடலுக்குப் பின்னால்
கடலை உறையவைக்கும்போது
காலத்திலிருந்து பிரிந்துபோவது
யாத்ரீக தர்மமாகிறது
மீண்டும் பருவத்தின் வாசலுக்கு
உணவின் கூடுதூக்கிச் செல்கிறது
ஒரு உஞ்சவிருத்தி
அது பல் துலக்காதது
ஈரத்துணிகளை உலர்த்துவது
கோடையில் நரைத்த
நினைவுகளிலிருந்து ஒரு மொட்டை
அது மலரும் மட்டும்
உற்று நோக்கி
கர்ப்பவாசக் கண்கள்போல
உறங்கிவிடுவது
இப்படித்தான் பிறக்கும்போதே
பிரபஞ்சத்தினூடான பிரிவும் நேர்கிறது
screenshot-2-bp-blogspot-com-2016-12-24-16-01-06

Written by Admin

Comments are closed.