Mr. Devendhira Poopathy

Mr. Devendhira Poopathy

He is a well established Tamil poet/writer who has reached this level pursuing his passion towards Tamil Literature and interest to explore new places. He is also the Joint Commissioner of Commercial Taxes, Tamil Nadu.

Follow Kadavu

இந்த வருடத்துப் புதியவர்கள் இன்னும் அறியாதிருக்கும் ஒன்றைச் சொல்லி என்னிடம் நேற்றைப் பற்றியும் வழக்கமான பலவற்றையும் கேட்டுக் கொண்டார்கள்...

— ஆறும் தேநீர் | நடுக்கடல் மௌனம்

ஆறும் தேநீர்

aarum_thaeneer

இந்த வருடத்துப் புதியவர்கள்
இன்னும் அறியாதிருக்கும் ஒன்றைச் சொல்லி
என்னிடம் நேற்றைப் பற்றியும்
வழக்கமான பலவற்றையும்
கேட்டுக் கொண்டார்கள்
மிகப் பழங்காலம் வரை நீண்ட பேச்சிலிருந்து
ஒருவரின் வீட்டருகே நீர் ஊற்று கிளம்பியிருப்பதையும்
நரிகள் வந்துபோகுமிடத்தில் இருந்த
குன்று ஒன்றில்
புதிய கோவில் வந்திருப்பதாக மற்றொருவரும்
சொன்னார்கள்
தேனீர் ஆறிக்கொண்டிருந்தது
இன்னும் சில மாமாங்கங்களில்
இந்தத் தலைமுறைகளின் திசைகள், திணைகள்
மாறிவிடும் என்றும் நான் சொன்னேன்
மற்றொருமுறை வருவதாகவும்
இம்முறைச் சந்திப்பு பயனுள்ளதாகவும்
இருந்தது என புன்னகைத்து விடைபெற்றார்கள்
அடுத்த வருடத்து புதியவனாக இருக்க
இப்போதிருந்தே பழகிக்கொள்ள நினைத்தேன்

Written by Admin

Leave a Comment